புதன், 30 செப்டம்பர், 2020

குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது

வினாடி வினா

இப்ராஹிம் வேலை இடத்தில் உள்ளார்.  அசருடைய நேரம் வருகிறது. பிறகு தொழலாம் என்று அலட்சியப்படுத்த, மக்ரிபுடைய நேரமும் வந்துவிட்டது. இந்நிலையில் அவர் என்ன செய்ய வேண்டும்?


விடை:

இப்ராஹிம் தவறவிட்ட தொழுகைக்காக இறைவனிடம் மனமுருகி மன்னிப்புக்கேட்க வேண்டும். பிறகு, மக்ரிப் தொழுகையை நேரம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். மேலும், அலட்சியப்போக்கை தவிர்த்து ஒவ்வொரு தொழுகையையும் அதன் உரிய நேரத்தில் தவறாது தொழுது வரவேண்டும். 


ஆதாரம்:

அல்லாஹ் கூறுகிறான் :

''நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது விசுவாசிகளின் மீது விதியாக்கப்பட்டுள்ளது.'' (4:103).

இந்த வசனம் தொழுகையை, குறித்த வேளையில் காலம் தாழ்த்தாது தொழுது விடவேண்டும் என மிகத் தெளிவாகவே கூறுகிறது.


“உங்களில் எவரேனும் தொழுகையை விட்டும் உறங்கி விட்டால் அல்லது மறந்து விட்டால் நினைவு வந்ததும் தொழட்டும்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

(அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக். ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம்)

மேற்கண்ட இரு காரணங்களில் மட்டுமே, உரிய நேரம் தவறிய பிறகும் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.


(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள். *ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். *(அவர்கள் அடையவேண்டிய கூலியில்) ஒரு சிறிதும் (குறைக்கப்பட்டு) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (19:59-60)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக