புதன், 30 செப்டம்பர், 2020

காணாத கனவைக் கண்டதாக சொல்வதன் விளைவுகள்

வினாடி வினா 

காணாத கனவைக் கண்டதாக சொல்வதன் விளைவுகள் என்ன?


விடை: 

'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் 'தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்...' என்று வந்துள்ளது. 

(ஸஹீஹுல் புகாரி: 7042. , அத்தியாயம்: 7. தயம்மும்)

' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 


தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும். 

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 7043. , அத்தியாயம்: 7. தயம்மும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக