புதன், 30 செப்டம்பர், 2020

ஷைத்தானின் ஊசலாட்டத்தின் உச்சக்கட்டம்

வினாடி வினா 

நம் மனதிற்குள் ஷைத்தான் வந்து, ”இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ”உன் இறைவனைப் படைத்தவர் யார்?” என்று கேட்கிறான். இந்தக் கேள்வி கேட்கும் கட்டத்தை நாம் அடையும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?


விடை: அந்தக் கட்டத்தை நாம் அடையும்போது நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும். அத்தகைய சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, 'இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், 'உன் இறைவனைப் படைத்தவர் யார்?' என்று கேட்கிறான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 3276. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக