புதன், 30 செப்டம்பர், 2020

குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு...

வினாடி வினா 

'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு _______ தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  1. நரகம்
  2. கேடு
  3. அழிவு

விடை: 1. நரகம்

ஆதாரம்:
'நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் 
(ஸஹீஹுல் புகாரி: 60. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக