புதன், 30 செப்டம்பர், 2020

இறைவனின் பெரியதோர் அத்தாட்சியாகிய இறுதி நாள் வருவதற்கு முன்னர்...

வினாடி வினா 

இறைவனின் பெரியதோர் அத்தாட்சியாகிய இறுதி நாள் வருவதற்கு முன்னர்; நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் ஒரு ____ செய்யாதிருந்துவிட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை ஒரு பலனையும் அளிக்காது.

  1. நற்செயலும்
  2. தர்மமும்
  3. தீமையும்

விடை: 1. நற்செயலும்

ஆதாரம்:
வானவர்கள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி வருவதையோ தவிர, (வேறெதனையும்) அவர்கள் எதிர் பார்க்கின்றனரா? உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி(யாகிய இறுதி நாள்) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் ஒரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை ஒரு பலனையும் அளிக்காது. ஆகவே, (அவர்களை நோக்கி ‘‘அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாமும் எதிர்பார்த்திருக்கிறோம்'' என்று (நபியே!) கூறுவீராக. (6:158)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக