புதன், 30 செப்டம்பர், 2020

பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவரின் நிலை

வினாடி வினா 

பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவரின் நிலை என்ன?


விடை: 

அபூ ஸலமா(ரலி) அறிவித்தார். 

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்' என்று கூறினார்கள். 

(ஸஹீஹ் புகாரி : 2453. அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்)


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான். 

இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹ் புகாரி : 2454. அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக