புதன், 30 செப்டம்பர், 2020

பாகப் பிரிவினை

வினாடி வினா

இப்ராஹிமுடைய தந்தை காலமாகிவிட்டார். அவருடைய தந்தை மரண சாசணம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவருக்கு யாரிடனும் கடனும் இல்லை. சில நாட்கள் கழித்து, அல்லாஹ் நிர்ணயித்த வண்ணம் சொத்து அவருடைய குடும்பத்தினருக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. அப்போது, அக்குடும்பத்தில் சொத்து பிரிக்கப்படுகிறது என்று அறிந்த; அந்த குடும்பத்திற்கு தொடர்பே இல்லாத நபர் ஒருவர் அங்கு வந்து தனக்கும் ஏதாவது தருமாறு கேட்கிறார். இப்ராஹிமுடைய குடும்பத்தார் என்ன செய்ய வேண்டும்? 

1. இன்னொரு நாள் வர சொல்லி அவரை அனுப்பி விட வேண்டும்

2. முக்கியமான நேரத்தில் வந்து இடையூறு செய்வதற்காக அவரை ஏச வேண்டும்

3. மேற்குறிப்பிட்ட எதுவுமில்லை


விடை: 3. மேற்குறிப்பிட்ட எதுவுமில்லை


ஆதாரம்:

(பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி)விடுங்கள். (4:8) 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக