புதன், 30 செப்டம்பர், 2020

குர்பானி பிராணிகளை எப்போது அறுக்க வேண்டும்?

வினாடி வினா 

குர்பானி பிராணிகளை எப்போது அறுக்க வேண்டும்?

  1. துல்ஹஜ் பிறை பத்து ஆரம்பித்ததிலிருந்து 
  2. துல்ஹஜ் பிறை பத்து அன்று ஃபஜ்ர் தொழுது முடித்ததிலிருந்து 
  3. பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து

விடை: 3. பெருநாள் தொழுகை முடிந்த பிறகே குர்பானி பிராணிகளை அறுக்க வேண்டும்

ஆதாரம்:

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார் 
(ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், 'இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப்பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்று கூறினார்கள். 
உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்து விட்டிருந்த) அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, '(இறைத்தூதர் அவர்களே!) என்னிடம் ஒரு வயதுடைய (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது' என்று கூறினார்கள்.
'(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழி முறையைப் பின்பற்றியவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என மற்றோர் அறிவிப்பில் உள்ளது. 
இதையும் பராஉ(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 5545. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)

👆🏼👆🏼👆🏼
தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் என்ன செய்ய வேண்டும்?

ஜுன்தப்(ரலி) அறிவித்தார். 
நான் நபி(ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் இருந்தேன். அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், 'தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் அதற்குப் பகரமாக மற்றொரு பிராணியை அறுக்கட்டும். (தொழுது முடிக்கும்வரை) அறுக்காமலிருப்பர் (தொழுகைக்குப் பின்) அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்' என்றார்கள்.35 
(ஸஹீஹுல் புகாரி: 7400. , அத்தியாயம்: 7. தயம்மும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக