புதன், 30 செப்டம்பர், 2020

குர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா?

வினாடி வினா

நாம் அல்லாஹ்வின் மீதும் குர்ஆனின் மீது மட்டுமே சத்தியம் செய்யலாம். வேறு யார் மீதும்; எந்த படைப்பினங்கள் மீதும் சத்தியம் செய்ய கூடாது.

1. சரி

2. தவறு


விடை: தவறு


ஆதாரம்:

 “சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 2679)

மேலும் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

 “சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று கூறினார்கள். (புகாரி 3836)

மேலும் “ஒரு யூதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முஸ்லிமாகிய நீங்களும் இணை கற்ப்பிக்கிறீர்கள், கஃபாவின் மீது ஆணையாக என்று கூறுகிறீர்கள் எனக் கேட்டார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் இனிமேல் சத்தியம் செய்வதாக இருந்தால் (கஃபாவின் மீது என்று கூறாமல்) கஃபாவின் இறைவன் மீது என்று கூற வேண்டும் என்று கூறினார்கள். (அஹ்மத், நஸாஈ)

மேலும் ”ஒரு மனிதர் கஃபாவின் இறைவன் மீது என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். உடனே அல்லாஹ்

அல்லாததின் மீது சத்தியம் செய்யக கூடாது என்று கூறினார்கள். யார் அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணைகற்பித்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) 


அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? 

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்’ என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 4860)

அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்தால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறார். அதனால் தான் மீண்டும் கலிமா சொல்ல வேண்டும் என்று ஹதீஸ் சொல்லித் தருகிறது. எனவே சத்தியம் செய்யும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக