புதன், 30 செப்டம்பர், 2020

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பணி

வினாடி வினா

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த பணி - மக்களை நல்லவற்றின் பக்கம் அழைத்து, தீமைகளிலிருந்து தடுத்து, அவர்களை திருந்தச் செய்வதாகும். 

1. சரி

2. தவறு


விடை: 2. தவறு. தூதை தெரிவிப்பதுதான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த பணியாகும் - மக்களை திருந்தச் செய்வது அல்ல.


ஆதாரம்: 

(நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர்களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி ‘‘நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கிறீர்களா?'' என்று கேட்பீராக. (அவ்வாறே) அவர்களும் தலைசாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் (அதற்காக நீர் கவலைப்படாதீர். நம் தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உம் மீது கடமையாக இருக்கிறது. அல்லாஹ் (தன்) அடியார்களை உற்று நோக்குகிறான். (3:20)

சம காலத்தை ஒப்பிடும்போதும், மார்க்க போதகர்கள் இதையே மனதில் கொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். அல்லாஹ் நாடியவர்களையே அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆகையால், குர்ஆன்/ஹதீஸ் அடிப்படையில் யாரேனும் நன்மையை ஏவி, தீமையை தடுக்க எண்ணி இருந்தும், போதனை செய்யப்பட்டவர்கள் செவிசாய்க்காது தனது மன இச்சைகளையே பின்பற்றினால், அதனால் அல்லாஹ் அவர்களை(நன்மையை ஏவி, தீமையை தடுத்தவர்ளை) குற்றம் பிடிக்க மாட்டான். 

ஆகையால், மார்க்க ரீதியில் ஒரு தவறிழைக்கப்படுமாயின், அதன் பற்றிய தெளிவு உங்களிடம் இருந்தால், அல்லாஹ்வின் பொறுத்ததை நாடி தெரியாதவர்களுக்கு எடுத்து கூறுங்கள். அவர்கள் உங்களை புறக்கணித்து விட்டாலும் கவலைப்படாதீர்கள். எடுத்து சொல்வது மட்டுமே நமது கடமையாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக