புதன், 30 செப்டம்பர், 2020

பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்கள்

வினாடி வினா

பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்கள் எவையென்று நபி(ஸல்) அறிவித்திருந்தார்கள்?


விடை: அல்லாஹ்விற்கு இணைவைத்தல், தாய் தந்தையரை நோவினை செய்தல் மற்றும் பொய் சாட்சியம் சொல்லுதல்.

 

ஆதாரம்:

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். 

(ஒரு முறை) 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)' என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்' என்று கூறினார்கள். 'நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 2654. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக