புதன், 30 செப்டம்பர், 2020

ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வத்தின் நிலை

வினாடி வினா 

அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய __________ மாறும்.

  1. உணவாக
  2. பாம்பாக
  3. தண்ணீராக

விடை: 2. பாம்பாக

ஆதாரம்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்'  'நானே உன்னுடைய புதையல்' என்று கூறும்.' 
இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.' என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். 
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
(ஸஹீஹுல் புகாரி: 1403. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக