புதன், 30 செப்டம்பர், 2020

தொழுகையில் மறதி

வினாடி வினா 

கடமையான தொழுகைகளில், மறதியின் காரணமாக எத்தனை ரக்அத்துகள் தொழுதோம் என்ற சந்தேகம் வருவதுண்டு. அச்சூல்நிலைகளில் நாம் என்ன செய்வது?


விடை: கடைசி இருப்பில் ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுக்க வேண்டும்


ஆதாரம்:

'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 1231. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)

அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். 

அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 1224. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


நாம் மறந்ததை மற்றவர்கள் நமக்கு தெரிவித்தால்…👇🏼

அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'என்ன விஷயம்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்' என ஒருவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 1226. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டாவது அல்லது மூன்றாவது ரக்அத்தில் (மறதியாக) சலாம் கொடுத்துவிட்டால்..👇🏼

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

அவர்கள் எங்களுக்கு லுஹரையோ அஸரையோ தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். அப்போது துல்யதைன்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம், 'இவர் கூறுவது உண்மைதானா?' எனக் கேட்டபோது அவர்களும் 'ஆம்' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுகை நடத்திவிட்டு இரண்டு ஸஜ்தாக்களும் செய்தார்கள். 

இப்னு ஸுபைர் மக்ரிப் தொழுகை நடத்தியபோது இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டுப் பேசியும்விட்டார். பின்பு (நினைவு வந்ததும்) மீதம் உள்ளதைத் தொழுதார். பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்துவிட்டு இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் எனக் கூறினார்' என ஸஅத் அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 1227. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக