புதன், 30 செப்டம்பர், 2020

யார் யார் குர்பானி கொடுப்பது சுன்னாவாகும்?

வினாடி வினா 

குர்பானி கொடுப்பது மிகவும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். யார் யார் குர்பானி கொடுப்பது சுன்னாவாகும்?


விடை: 

  1. முஸ்லிமாக இருக்க வேண்டும்.
  2. பருவ வயதை அடைந்தவராகவும் 
  3. புத்தி சுவாதீனமுள்ளவராகவும் இருக்க வேண்டும். 
  4. வசதி இருக்க வேண்டும். அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் தஷ்ரீக்குடைய மூன்று நாள்களில் தன்னுடைய தேவைக்கும் மற்றும் தான் எவர்களுக்கு வாழ்வாதாரம் கொடுப்பது கடமையோ அவர்களுடைய தேவைக்கும் அதிகமாக செல்வம் யாரிடம் இருக்குமோ அவர் குர்பானி கொடுக்க வேண்டும்

("உழ்ஹிய்யா" என்ற புத்தகத்திலிருந்து மேற்கோள் எடுக்கப்பட்டுள்ளது, மொழிபெயர்த்தவர்: உமர் ஷரிஃப் இப்னு அப்துஸ் ஸலாம்  - தாருல் ஹுதா பதிப்பகம்)

ஒரு குடும்பத்துக்கு ஓர் ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானது. வசதியுள்ளவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை குர்பான் கொடுக்கலாம்.


👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார் என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: அஃதா பின் யஸார்(ரஹி), நூல்: திர்மிதி 1587 - ஸஹீஹ்)

குறிப்பு: ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆடுகளை குர்பானி கொடுப்பதற்கு அனுமதியுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக