புதன், 30 செப்டம்பர், 2020

ஹஜ்ஜுக்கு அல்லது உம்ரா செய்ய செல்வோரிடம் நபி(ஸல்) அவர்களுக்குச் ஸலாம் சொல்லி அனுப்புவது சரியான வழிமுறையா?

வினாடி வினா

பொதுவாக ஹஜ்ஜுக்கு அல்லது உம்ரா செய்ய செல்வோரிடம், நாம் நபி(ஸல்) அவர்களுக்குச் ஸலாம் சொல்லி அனுப்புகிறோம். இது நபியின் வழிமுறையா?


விடை:  

ஹஜ்ஜுக்கு அல்லது உம்ராவுக்கு செல்வோரிடம் தனக்காக அங்கே துஆ செய்யும்படி சொல்ல ஆதாரம் உண்டு! நபி(ஸல்) அவர்களே உமர்(ரலி) அவர்கள் உம்ராவுக்குச் சென்றபோது தனக்காக துஆ செய்யும்படி கேட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு ஸஹாபாக்கள் ஸலாம் சொல்லிவிட்டதாக எந்த ஆதாரமும் இல்லை.


ஆதாரம்:

நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘நிச்சயமாக மலக்குகள் பறந்து கொண்டிருக்கின்றனர்; எனது உம்மத்தினரின் ஸலாத்தை அவர்கள் எனக்கு எத்திவைப்பர்.’ நஸாயீலே(1282) பதியப்பட்ட நம்பகமான ஹதீஸாகும்.

அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் மற்றும் ஒரு அறிவிப்பில் ‘ எனது கப்ரை பெருநாள் (கொண்டாடும் இடம்) போன்று ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து சொல்லுங்கள் உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் என்னை வந்தடையும்.’ (அபூதாவூத் 2042.)

ஆகவே, எங்கு இருந்த போதிலும் நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தும், ஸலாமும் கூறுவோம். நமது ஸலவாத்து நாம் எங்கிருந்த போதிலும் அது மலக்குகளின் மூலமாக நபியவர்களுக்கு எத்திவைக்கப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக