புதன், 30 செப்டம்பர், 2020

குர்பானி கொடுக்கவிருக்கும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்

வினாடி வினா 

குர்பானி கொடுக்கவிருக்கும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் என்ன?


விடை: குர்பானியை நிறைவேற்றும் வரை அவர்களது முடி, நகம் ஆகியவற்றை நீக்கக்கூடாது


ஆதாரம்:

உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க விரும்பி துல்ஹஜ் (முதல்) பிறையை கண்டால், குர்பானியை நிறைவேற்றும் வரை (அவர்) தனது முடி, நகம் ஆகியவற்றை நீக்க வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உம்மு ஸலமா(ரலி), நூல்: முஸ்லிம் 5234)

குறிப்பு: ஒருவர் துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் இடையில் குர்பானிக்கான நிய்யத் (எண்ணம்) செய்திருந்தால், அவர் அந்த நேரத்திலிருந்து குர்பானியை நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் ஆகியவற்றை நீக்கக்கூடாது. குர்பானி கொடுப்பவர் மட்டுமே தனது முடி நகம் ஆகியவற்றை நீக்கக்கூடாது. அவரின் குடும்பத்தினர் இதனை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக