புதன், 30 செப்டம்பர், 2020

குர்பானி கொடுக்கப்படும் பிராணிகளின் வயது வரம்பு

வினாடி வினா 

குர்பானி கொடுக்கப்படும் பிராணிகளின் வயது வரம்பை பற்றி ஹதீஸ்கள் என்ன கூறுகின்றன?


விடை: 

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில்; ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆட்டிற்கு ஒரு வயதும், மாட்டிற்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் ஆட்டுக் குட்டியைக் கொடுக்கலாம்.


ஆதாரம்: 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், முசின்னா’வைத் தவிர வேறு எதையும் அறுக்காதீர்கள். அது சிரமமாக இருந்தால், ஆறு மாதத்தை பூர்த்தி செய்த செம்மறி ஆட்டை அறுங்கள்.

(அறிவிப்பார்: ஜாபீர் பின் அப்துல்லாஹ்(ரலி),  நூல்: முஸ்லிம் 5194)

ஆட்டில் ஒரு வருடத்தை மாட்டில் இரண்டு வருடத்தை பூர்த்தி செய்தவற்றையும், ஒட்டகத்தில் ஐந்து வருடத்தை பூர்த்தி செய்தவற்றையும் குறிப்பிட “முசின்னா” என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். நபி(ஸல்) அவர்கள் முசின்னா’வை குர்பானி கொடுக்கவே வலியுறுத்தியுள்ளார்கள். குறைவின் காரணமாக ஒருவருக்கு கொடுப்பதற்கு சிரமமாக இருந்தால், அவர் “ஜத்அ” ஆறு மாதத்தை பூர்த்தி செய்த செம்மறி ஆட்டை அறுப்பதற்கு அனுமதியுள்ளது. 

குறிப்பு: இந்த விதிவிலக்கு செம்மறி ஆட்டிற்கு மட்டுமே மற்றவற்றிற்கு இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக