புதன், 30 செப்டம்பர், 2020

அரஃபா தின நோன்பு

வினாடி வினா 

எந்த அமல் செய்வதை நபி(ஸல்) அவர்கள் முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவ பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்கள்?


விடை: துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை


ஆதாரம்:

அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

……….துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 2151., அத்தியாயம்: 13. நோன்பு)


அரஃபா தினத்தின் நோன்பை ஹஜ் செய்பவர்கள் நோற்கக் கூடாது

உம்முல் ஃபள்ல்(ரலி) அறிவித்தார். 

அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்கு பானம் அனுப்பி வைத்தேன்; அதையவர்கள் குடித்தார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 1658. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக