புதன், 30 செப்டம்பர், 2020

பெண்கள், சமூக வலைத்தளங்களில், செயலி’களில்(apps) மற்றும் புரோஃபைல் படங்களில்(profile picture) தங்கள் படங்களை பதிவேற்றம் செய்வது பற்றி

வினாடி வினா 

பெண்கள், சமூக வலைத்தளங்களில், செயலி’களில்(apps) மற்றும் புரோஃபைல் படங்களில்(profile picture) தங்கள் படங்களை பதிவேற்றம் செய்வது பற்றி இஸ்லாமிய பார்வை என்ன?


விடை: ஒரு பருவமடைந்த பெண், ஹிஜாப் அணிந்தவாறோ அல்லது அணியாதவாறோ தன் படங்களை சமூக வலைத்தளங்களிலோ, செயலி’களிலோ(apps) மற்றும் புரோஃபைல் படங்களிலோ(profile picture) பதிவேற்றம் செய்வது பல காரணங்களுக்காக ஹராமாக கருதப்படுகிறது.


இது பெண்ணுக்கும் அவளைப் பார்ப்பவர்களுக்கும் தீமைக்கான கதவைத் திறக்கிறது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில், தீங்கான எண்ணம் கொண்டவர்களின் கைகளில் அப்படங்கள் சேர்ந்தால், என்னென்ன நடக்கலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 

“என்னுடைய வலைத்தள பக்கங்களை தெரியாதவர்கள் பார்க்காதவாறு அமைத்துள்ளேன்” என்று சிலர் கூறுவர்(privacy settings). ஒவ்வொரு வலைத்தளங்களையும் செயலிகளையும் நிர்வகிப்பவர்களும் உங்கள் அந்நியர்களே என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். எப்பொழுது உங்கள் படங்களை பதிவேற்றம் செய்கிறீர்களோ, அப்பொழுதே ஃபித்னாவுக்கு வழிவகுகின்றீர்கள்.

அகற்றப்பட்ட படங்களை மீட்டெடுக்க தொழில்நுட்பம் உள்ள போது, நீங்கள் எவ்வளவு “privacy settings” செய்திருந்தாலும், உங்கள் வலைத்தள பக்கங்களுக்கும் சென்று உங்கள் படங்களையும் காண தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களுக்கு வழி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் பற்றி தன் கணவனிடம் வர்ணித்துக் கூறுவது கூடாது என ஹதீஸ் உள்ளது. ஆகவே, தன் படங்களை போடுவது தானாகவே முன்வந்து தங்கள் அழகை அந்நியர்களிடம் வெளிப்படுத்துவது போல் ஆகிவிடும். 


ஆதாரம்:

இந்த குர்ஆன் வசனத்தை உற்று நோக்கவும் → (24:31)

அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஆண்களுக்குப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் எனக்குப் பிறகு நான் விட்டுச்செல்லவில்லை." (உஸாமா இப்னு ஸைத்(ரலி) (ஸஹீஹுல் புகாரி:5096).


👆🏼👆🏼👆🏼

ஆகவே எனது அன்பு சகோதரிகளே... இதுவரை நாம் இந்த தவற்றை செய்திருந்தால், பதிவேற்றம் செய்த அனைத்து படங்களையும் இன்றே அகற்றுவோம். சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ். 

வாட்ஸ்அப் புரோஃபைல் படங்களாக உங்கள் படங்களை வைத்திருந்தீர்கள் என்றால் அதையும் அகற்றி விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இதுவரை தெரிந்தோ தெரியாமலோ இந்த தவற்றை செய்திருந்தால், அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து, அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்வோம். 

உங்களுக்கு தெரிந்த அனைத்து சகோதரிகளுக்கும் இச்செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள். 

பெண்களாகிய நாம், எந்த ஆணுக்கும் சோதனையாகி விடுவதை விட்டும் அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகாப்பானாக!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக