புதன், 30 செப்டம்பர், 2020

எவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார்?

வினாடி வினா

எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார். அவை என்ன?


விடை: 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார். (அவை:) 

  1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 
  2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 
  3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று இறைமறுப்பிற்குத் திரும்புவதை அவர் வெறுப்பது.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 6941. , அத்தியாயம்: 7. தயம்மும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக