சனி, 30 ஜனவரி, 2021

முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும்.

வினாடி வினா

முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த இரண்டு விஷயங்கள் என்ன?



விடை: 1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம், 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.


ஆதாரம்:


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 

1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 

2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. 

(ஸஹீஹுல் புகாரி: 6420. , அத்தியாயம்: 7. தயம்மும்)



வெள்ளி, 29 ஜனவரி, 2021

அல்லாஹ் தனக்கு தானே எதை தடைச் செய்துகொண்டு அதை நமக்கிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டான்?

வினாடி வினா

அல்லாஹ் தனக்கு தானே எதை தடைச் செய்துகொண்டு அதை நமக்கிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டான்?


விடை: அநீதியிழைப்பதை

 

ஆதாரம்:


அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:

என் அடியார்களே!

அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.

என் அடியார்களே!

(ஸஹீஹ் முஸ்லிம்: 5033., அத்தியாயம்: 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் )


ஒரு பெண் தன் கணவர் உள்ளுரில் இருக்க, அவரின் அனுமதியில்லாமல் (நஃபில்) நோன்பு நோற்கலாமா?

வினாடி வினா

ஒரு பெண் தன் கணவர் உள்ளுரில் இருக்க, அவரின் அனுமதியில்லாமல் (நஃபில்) நோன்பு நோற்கலாம்.

1. சரி

2. தவறு


விடை: 2. தவறு

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' 

ஒரு பெண் தன் கணவர் உள்ளுரில் இருக்க, அவரின் அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவரின் அனுமதியில்லாமல் (யாரையும்) அவரின் இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரின் பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி அவருக்கும் கிடைக்கும். 130. 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

இந்த ஹதீஸிலுள்ள (கூடுதல்) நோன்பு பற்றிய தகவல் (மட்டும்) மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. 

பகுதி 88 

(ஸஹீஹுல் புகாரி: 5195. , அத்தியாயம்: 5. குளித்தல்)


தூதர் (ஸல்) நாட்களிலேயே எந்த நாளை சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றார்கள்

வினாடி வினா

தூதர் (ஸல்) மாதங்களிலேயே ரமளான் மாதத்தை சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றார்கள். அதே போல் நாட்களிலேயே எந்த நாளை சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றார்கள்?


விடை: ஆஷூரா நாளை

ஆதாரம்:

உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்களிலேயே இந்த (ஆஷூரா) நாளையும் மாதங்களிலேயே இந்த -ரமளான்- மாதத்தையும் தவிர வேறெதையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றதாக நான் அறியவில்லை" என்று விடையளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 2086., அத்தியாயம்: 13. நோன்பு)


6 விஷயங்கள் ஏற்படும் வரை, கியாம நாள் ஏற்படாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வினாடி வினா

6 விஷயங்கள் ஏற்படும் வரை, கியாம நாள் ஏற்படாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவை என்னென்ன விஷயங்கள்?


விடை:

ஆதாரம்:

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை - காலம் சுருங்கும் வரை - குழப்பங்கள் தோன்றும் வரை - கொலை செய்தல் அதிகமாகும் வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை - கியாம நாள் ஏற்படாது.' 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 1036. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)



மறுமை நாளில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர்

வினாடி வினா

மறுமை நாளில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?


விடை: உள்ளத்திலிருந்து - தூய்மையான எண்ணத்துடன் 'வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்

ஆதாரம்:

'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?' என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவால் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து - தூய்மையான எண்ணத்துடன் 'வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்' என்று கூறினார்கள்' அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 99. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


மூஸா நபியின் சமூகத்தார் எதை தெய்வமாக ஆக்கிக் கொண்டார்கள்?

வினாடி வினா

மூஸா நபியின் சமூகத்தார் எதை தெய்வமாக ஆக்கிக் கொண்டார்கள்?


விடை: ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை

ஆதாரம்:

(தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு ஒரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள். (7:148)


யாருடைய நற்கருமங்கள் அனைத்தும் அழிந்து விடும்?

வினாடி வினா

யாருடைய நற்கருமங்கள் அனைத்தும் அழிந்து விடும்?


விடை: எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகிறார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் 

ஆதாரம்:

ஆகவே, எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகிறார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்து விடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா? (7:147)


சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்த நாள்

வினாடி வினா

சூரியன் உதிக்கும் நாட்களில் எது சிறந்த நாளாகும்?


விடை: வெள்ளிக்கிழமை

ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1547., அத்தியாயம்: 7. ஜும்ஆ)


அம்பு எய்வதில் தேர்ச்சி பெற்ற நபி

வினாடி வினா

அம்பு எய்வதில் தேர்ச்சி பெற்ற நபி யார்?


விடை: இஸ்மாயீல் (அலை) 

ஆதாரம்:

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். 

பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்' என்று கூறினார்கள். உடனே, இரண்டு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன். நீங்கள் அம்பெய்யுங்கள்' என்று கூறினார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 2899. , அத்தியாயம்: 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்)


நிராகரிப்பவர்களின் குஃப்ரு, ஷிர்க்கான கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் என்ன?

வினாடி வினா

நிராகரிப்பவர்களின் குஃப்ரு, ஷிர்க்கான கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் என்ன?


விடை: வேர் அறுபட்டு பூமிக்கு மேல் (உறுதியின்றி) நிற்கும் (பட்டுப் போன ஒரு) கெட்ட மரத்திற்கு உதாரணம்.

ஆதாரம்:

(நிராகரிப்பவர்களின் குஃப்ரு, ஷிர்க்கான) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம்: வேர் அறுபட்டு பூமிக்கு மேல் (உறுதியின்றி) நிற்கும் (பட்டுப் போன ஒரு) கெட்ட மரத்திற்கு ஒப்பாகும்; அது நிலைத்திருக்காது. (14:26)


போர்க்களத்தில் பெண்கள் ஆற்றிய பங்கு

வினாடி வினா

போர்க்களத்தில் பெண்கள் ஆற்றிய பங்கு என்ன?


விடை: காயமடைந்தவர்களுக்கு மருந்திடல், இறந்தவர்களை ஊருக்குக் கொண்டு செல்லுதல்.

ஆதாரம்:

ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்(ரலி) கூறினார். 

(பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும் மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களை (போர்க் களத்திலிருந்து) மதீனாவிற்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.

(ஸஹீஹுல் புகாரி: 2882. , அத்தியாயம்: 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்)


இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை காண்பிக்கச் சொன்ன நபி யார்?

வினாடி வினா

அல்லாஹ்விடம், இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை காண்பிக்கச் சொன்ன நபி யார்?

1. மூஸா நபி

2. ஈஸா நபி

3. இப்ராஹிம் நபி


விடை: 3. இப்ராஹிம் நபி

ஆதாரம்:

இப்றாஹீம் (இறைவனை நோக்கி), “என் இறைவனே! இறந்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய். (அதை) நீ எனக்குக் காண்பி'' எனக் கூறியபோது, அவன் (இதை) ‘‘நீர் நம்பவில்லையா?'' என்று கேட்டான். (அதற்கு) அவர் ‘‘நான் நம்பியே இருக்கின்றன். ஆயினும், (அதை என் கண்ணால் கண்டு) என் உள்ளம் திருப்தியடைவதற்காக (அதைக் காண்பி)'' எனக் கூறினார். (அதற்கவன்) ‘‘நான்கு பறவைகளைப் பிடித்து நீர் அவற்றைப் பழக்கி, பின்னர் (அவற்றைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிட்டு (நடுவில் இருந்துகொண்டு) அவற்றை நீர் கூப்பிடுவீராக. அவை உம்மிடம் பறந்து வந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) ‘‘நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மிக்க நுண்ணறிவுடையவன் என்பதையும் நீர் உறுதியாக அறிந்து கொள்வீராக'' என்றான். (2:260)


யாரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்?

வினாடி வினா

யாரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்?

1. மூஸா நபி

2. ஈஸா நபி

3. இப்ராஹிம் நபி


விடை: 2. ஈஸா நபி

ஆதாரம்:

மாறாக அவரை (ஈஸா)  அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.(4:158)


நாம் காலணியை கழற்றும்போது முதலில் எந்த காலிலிருந்து கழற்ற வேண்டும்?

வினாடி வினா

நாம் காலணியை கழற்றும்போது முதலில் எந்த காலிலிருந்து கழற்ற வேண்டும்?


விடை: இடது காலிலிருந்து

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 5855. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)


சமையல் காளானுடைய சாறு எதற்கு நிவாரணமாகும்?

வினாடி வினா

சமையல் காளானுடைய சாறு எதற்கு நிவாரணமாகும்?


விடை: கண்ணுக்கு நிவாரணமாகும்

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு'வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.

என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 4639. , அத்தியாயம்: 5. குளித்தல்)


மக்கள் பீடையாக கருதிய நபி

வினாடி வினா

எந்த நபியை மக்கள் பீடையாக கருதினார்கள் என அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்? 

1. மூஸா நபி

2. இப்ராஹிம் நபி

3. யூனுஸ் நபி


விடை: 1. மூஸா நபி

ஆதாரம்:

எனினும் அவர்களோ, அவர்களுக்கு (ஒரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது)தான் வந்தது என்றும், ஒரு தீங்கேற்படும் சமயத்தில் ‘‘(இது எங்களுக்கு வரவேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது'' என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை. (7:131)


இறைமறுப்பாளன் மறுமை நாளில் எவ்வாறு இழுத்துச் செல்லப்படுவான்?

வினாடி வினா

இறைமறுப்பாளன் மறுமை நாளில் எவ்வாறு இழுத்துச் செல்லப்படுவான்?


விடை: தன் முகத்தால்

ஆதாரம்:

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?' என்று (பதிலுக்குக்) கேட்டார்கள். 

(இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) 'ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!' என்று கூறினார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 4760. , அத்தியாயம்: 5. குளித்தல்)


அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள்

வினாடி வினா

யார் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள்?


விடை:

ஆதாரம்:

எவர்கள், நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து வெளியேறி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிகின்றனரோ அவர்கள் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள். இவர்கள்தான் வெற்றி அடைந்தவர்கள். (9:20)


யுக முடிவுக்காக ___ பிளக்கும்போது எண்ணெயைப்போல் சிவந்ததாக ஆகும்

வினாடி வினா

யுக முடிவுக்காக எது பிளக்கும்போது எண்ணெயைப்போல் சிவந்ததாக ஆகும்.

1. வானம்

2. கடல்

3. மலை


விடை: 1. வானம்

ஆதாரம்:

(யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜைத்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும். (55:37)


மேட்டில் ஏறும்போதும்; பள்ளத்தாக்குகளில் இறங்கும்போதும் கூற வேண்டிய தஸ்பிஹ்

வினாடி வினா

கோடிட்ட இடங்களை நிரப்புக.

நாங்கள் மேட்டில் ஏறும்போது ____ என்று தக்பீர் கூறி வந்தோம்; பள்ளத்தாக்குகளில் இறங்கும்போது ____ என்று தஸ்பீஹ் செய்து வந்தோம்.


விடை: அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹ்.

ஆதாரம்:

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். 

நாங்கள் (மேட்டில்) ஏறும்போது 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று தக்பீர் கூறி வந்தோம்; (பள்ளத்தாக்குகளில்) இறங்கும்போது 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் குறைகளிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் தூய்மையானவன்' என்று தஸ்பீஹ் செய்து வந்தோம்.

(ஸஹீஹுல் புகாரி: 2993. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)


எதை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்

வினாடி வினா

எதை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விடும்படி அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகிறான்?

1. அன்பளிப்பை

2. அமானிதத்தை

3. இரண்டுமே இல்லை


விடை: 2. அமானிதத்தை

ஆதாரம்:

(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்கும்படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான். (4:58)


மறுமை நாளில் மலைகளின் நிலை

வினாடி வினா

மறுமை நாளில் மலைகள் என்னவாகும்?


விடை:

அந்நாளில், பூமியும் மலைகளும் ஆட்டம் கொடுத்து (ஒன்றோடொன்று மோதி) மலைகள் சிதறுண்ட மண் குவியல்களாகி விடும். (73:14)


சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால்...

வினாடி வினா

சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏன்?


விடை: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. 

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நீங்கள் சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (எனவேதான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (எனவேதான் கத்துகிறது.) 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 3303. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)


உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் நுழையக் கருதினால்....

வினாடி வினா

உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் நுழையக் கருதினால் என்ன செய்ய வேண்டும்?


விடை: அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரை நுழையாதீர்கள்.

ஆதாரம்:

நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரை நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக! (24:27)


கஞ்சத்தனம் செய்தவர்களுக்கு தண்டனை

வினாடி வினா

கஞ்சத்தனம் செய்தவர்களுக்கு கியாமத் நாளில் என்ன தண்டனை வழங்கப்படும்?


விடை: கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும்.

ஆதாரம்:

எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவன் ஆவான். (3:180)


போருக்குச் செல்லாமல் இருப்பது யார் யார் மீது குற்றம் இல்லை?

வினாடி வினா

போருக்குச் செல்லாமல் இருப்பது யார் யார் மீது குற்றம் இல்லை?


விடை: குருடர், நொண்டி மற்றும் நோயாளி மீது குற்றமில்லை.

ஆதாரம்:

(போருக்கு வராததைப் பற்றிக்) குருடர் மீது ஒரு குற்றமுமில்லை; நொண்டி மீதும் ஒரு குற்றமுமில்லை; நோயாளி மீதும் ஒரு குற்றமுமில்லை. எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மெய்யாகவே கீழ்ப்படிந்து (போருக்கு உம்முடன்) வருகிறாரோ, அவரை (அல்லாஹ்) சொர்க்கங்களில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். எவர் (உமக்கு கீழ்ப்படியாமல் போருக்கு உம்முடன் வராது) புறக்கணிக்கிறாரோ, அவரை மிகக் கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வான். (48:17)


தர்மம் செய்தால் ஷைத்தான் எதைக் கொண்டு நமக்கு பயம் காட்டுகிறான்?

வினாடி வினா

நாம் தர்மம் செய்தால் ஷைத்தான் எதைக் கொண்டு நமக்கு பயம் காட்டுகிறான்?

1. நரகத்தை

2. வறுமையை

3. இரண்டும் இல்லை


விடை: 2. வறுமையை

ஆதாரம்:

(நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன் மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கிறான். மேலும், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (2:268)


அல்லாஹ்வுக்காக பள்ளிவாசல் ஒன்றை கட்டுகிற வெகுமதி

வினாடி வினா

அல்லாஹ்வுக்காக பள்ளிவாசல் ஒன்றை கட்டுகிற வெகுமதி என்ன?


விடை: அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்.


ஆதாரம்:

உபைதுல்லாஹ் அல் கவ்லானி அறிவித்தார். 

உஸ்மான்(ரலி) பள்ளியை விரிவுபடுத்தியபோது 'நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள்' என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு 'அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்' என்று நபி(ஸல்) கூற செவியுற்றுள்ளேன்' என உஸ்மான்(ரலி) கூறினார். 

(ஸஹீஹுல் புகாரி: 450. , அத்தியாயம்: 8. தொழுகை)


வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தை

வினாடி வினா

ஒருவர் கூறுவதன் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தை என்ன?


விடை: இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்' என்று ஒருவர் கூறுவதுதான்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

'இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்' என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், 'மறக்கவைக்கப்பட்டுவிட்டது' என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி வாருங்கள். ஏனெனில், ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும். 

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 

இந்த நபிமொழி, வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. 

(ஸஹீஹுல் புகாரி: 5032. , அத்தியாயம்: 66. குர்ஆனின் சிறப்புகள்)