புதன், 30 செப்டம்பர், 2020

மறுமையின் முதற்படி

வினாடி வினா 


________  மறுமையின் முதற்படியாகும். அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது.

  1. ஈமான் 
  2. கலிமாவை வாயால் மொழிவது
  3. கப்ர்
  4. பாவமன்னிப்பு

விடை: கப்ர் 

ஆதாரம்:
உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள். சுவர்க்கம், நரகத்தை நினைத்தா அழுகின்றீர் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் இல்லை என்றார். இன்னதுக்காகவா அழுகின்றீர் எனக் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘கப்ர் மறுமையின் முதற்படியாகும் அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது. நான் எந்த மோசமான காட்சியைக் கண்டாலும் கப்ர் எனக்கு அதை விடக் கடினமாகவே தெரிகிறது’ என நபியவர்கள் கூறினார்கள் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஹானி
ஆதாரம்: அஹ்மத் 454

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக