புதன், 30 செப்டம்பர், 2020

திங்கள் வியாழன் நோன்பு

வினாடி வினா 

நபி(ஸல்) அவர்கள் ஏன் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்?


விடை: ஒவ்வொரு வியாழன் மற்றும், திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நபி(ஸல்) நோன்பு நோற்றுள்ள நிலையில் தனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை அவர் விரும்பினார்.


ஆதாரம்:

நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். மேலும் “ஒவ்வொரு வியாழன் மற்றும், திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அபுஹூரைரா(ரலி) அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக