புதன், 30 செப்டம்பர், 2020

நம்மால் அநீதியிழைக்கப்பட்டவரின் சாபம்

வினாடி வினா

நம்மால் அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு ஏன் அஞ்ச வேண்டும்?


விடை: அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை. ஆகவே, அவரின் பிரார்த்தனை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். 


ஆதாரம்:

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை' என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 2448. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக