புதன், 30 செப்டம்பர், 2020

குர்பானி கொடுக்கும் பிராணிகளை அறுக்கும் முறைகள்

வினாடி வினா 

குர்பானி கொடுக்கும் பிராணிகளை அறுக்கும் முறைகள் எவ்வாறு வேறுபடுகின்றன?


விடை: 

ஆடு மாடுகளை ஒரு பக்கமாக படுக்க வைத்து அவற்றின் பக்கவாட்டில் காலை வைத்து அறுக்க வேண்டும்


ஆதாரம்:

அனஸ்(ரலி) கூறினார் 

நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 5565. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)


ஒட்டகங்களை நிற்கவைத்து அறுக்க வேண்டும்  


ஆதாரம்:

ஸியாத் இப்னு ஜுபைர் அறிவித்தார். 

'இப்னு உமர்(ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, 'அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறை!' என்று கூறியதை பார்த்தேன்.' 

(ஸஹீஹுல் புகாரி: 1713. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக