புதன், 30 செப்டம்பர், 2020

மூன்று வகையான மனிதர்களுக்கு எதிராக அல்லாஹ் வாதாடுவான்.

வினாடி வினா

மறுமையில் அல்லாஹ் மூன்று வகையான மனிதர்களுக்கு எதிராக தானே வாதாடுவான். அவர்கள் யாவர்?


விடை: 

1. அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்.

2. சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.

3. ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2227. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!' என்று அல்லாஹ் கூறினான்.' 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2270. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக