புதன், 30 செப்டம்பர், 2020

நபி (ஸல்)அவர்கள் தம் கைகளை அதிகம் உயர்த்திய பிரார்த்தனை

வினாடி வினா

எந்தப் பிரார்த்தனையின் போது நபி (ஸல்)அவர்கள் தம் கைகளை அதிகம் உயர்த்துவார்கள்?


விடை: மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது


ஆதாரம்:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது தவிர, வேறு எந்தப் பிரார்த்தனையின் போதும் (இந்த அளவிற்கு) கைகளை உயர்த்தமாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது) தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவிற்கு அவர்கள் கைகளை உயர்த்தினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்கள் "தமது அக்குளின் வெண்மை" அல்லது "அக்குள்களின் வெண்மை”  தென்படும் அளவிற்கு (உயர்த்தினார்கள்)" என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1631., அத்தியாயம்: 9. மழைத் தொழுகை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக