புதன், 30 செப்டம்பர், 2020

நபி(ஸல்) அவர்களின் மரணத்தருவாயில்...

வினாடி வினா 

நபி(ஸல்) அவர்கள் தனது மரணத்தருவாயில், அவருடைய மகள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் இரண்டு முறை இரகசியமாகப் பேசினார்கள். முதலில் பேசியதற்கு ஃபாத்திமா(ரலி) அழுதார்கள். இரண்டாவது முறை ஃபாத்திமா(ரலி) சிரித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரு முறையும் அப்படி என்ன சொன்னார்கள்?


விடை: 

'நபி(ஸல்) அவர்கள் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் ஃபாத்திமா(ரலி) அழுதார்கள். பிறகு இரண்டாம் முறை இரகசியமாகப் பேசியபோது, அவர்களின் குடும்பத்தாரில் அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப் போகும் முதல் ஆள் நீ (ஃபாத்திமா(ரலி)) என்று கூறினார்கள். அதனால் ஃபாத்திமா(ரலி) சிரித்தார்கள்.


ஆதாரம்:

அதற்கு ஃபாத்திமா, 'நபி(ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசியபோது அவர்களின் குடும்பத்தாரில் நானே அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப் போகும் முதல் ஆள் என்று கூறினார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியோடு) சிரித்தேன்' என்று பதிலளித்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 3716. , அத்தியாயம்: 4. உளூச் செய்வது)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக