புதன், 30 செப்டம்பர், 2020

நாம் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?

வினாடி வினா

மக்களில் நன்மை செய்வதற்கும் மற்றும் நல்லுறவு கொள்வதற்கும் மிகத் தகுதியானவர்கள் யார்?


விடை:  தாய் பின்பு தந்தை


ஆதாரம்:

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள். 

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

(ஸஹீஹுல் புகாரி: 5971. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக