வெள்ளி, 30 அக்டோபர், 2020

நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள்

 வினாடி வினா

இதற்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன? 



விடை:

1. எதிரிகளுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் உதவப்பட்டுள்ளார்.


2. பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் நபி(ஸல்) அவர்களுக்கு  ஆக்கப்பட்டுள்ளது. 


3. போரில் கிடைக்கிற பொருள்கள் நபி(ஸல்) அவர்களுக்கு  ஹலாலாக்கப்பட்டுள்ளன. 


4. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.


5. ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக நபி(ஸல்)  அவர்கள் அனுப்பப்பட்டு உள்ளார். 


ஆதாரம்:

'எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 335. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக