ஞாயிறு, 25 அக்டோபர், 2020

மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே எழுதப்படும் நான்கு விஷயங்கள்

வினாடி வினா


மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே எந்த நான்கு விஷயங்கள் எழுதப்பட்டு விடுகின்றன?


விடை:

1. ஆணா / பெண்ணா

2. நல்லவனா / கெட்டவனா 

3. அவனுக்குச் கொடுக்கப்படவிருக்கும் செல்வம்

4. அவனுடைய வாழ்நாள்


ஆதாரம்:

'அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 318. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக