வெள்ளி, 6 நவம்பர், 2020

நபி(ஸல்) யாருடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டார்கள்?

வினாடி வினா

நபி(ஸல்) யாருடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டதாக கூறினார்கள்? 


1. அலி(ரலி).

2. உமர்(ரலி)

3. பிலால்(ரலி)



விடை: 3. பிலால்(ரலி)


ஆதாரம்:


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே இஸ்லாத்தில் இணைந்த பின் நிர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்' என்று விடையளித்தார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 1149. , அத்தியாயம்: 19. தஹஜ்ஜுத்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக