செவ்வாய், 24 நவம்பர், 2020

தமக்கு ஒரு மகிழ்ச்சி அல்லது ஒரு துயரம் ஏற்படும் பொழுது, ஒரு இறை நம்பிக்கையாளரின் செயல்பாடு எப்படி அமையும்?

வினாடி வினா

தமக்கு ஒரு மகிழ்ச்சி அல்லது ஒரு துயரம் ஏற்படும் பொழுது, ஒரு இறை நம்பிக்கையாளரின் செயல்பாடு எப்படி அமையும்? 



விடை: ஒரு இறை நம்பிக்கையாளருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், நன்றி செலுத்துவார். துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காப்பார்.


ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.

இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5726., அத்தியாயம்: 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக