புதன், 18 நவம்பர், 2020

கொட்டாவியின் போது என்ன செய்ய வேண்டும்?

வினாடி வினா


மார்க்கத்தின் அடிப்படையில் கொட்டாவியின் போது என்ன செய்ய வேண்டும்?



விடை: கொட்டாவியை முடியுமானவரை தடுத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தடுக்க முடியாத பட்சத்தில், நம் கையை வாயில் வைத்து மறைத்துக்கொண்டு “ஹா” என்று சம்பதமிடாமல் கொட்டாவி விடவேண்டும்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் 'ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 3289. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)



“அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜிம்” கூறுவதற்கான விளக்கத்தை கீழ்க்காணும் லிங்க்’கை கிளிக் செய்து படிக்கவும். 


https://www.islamkalvi.com/?p=118940


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக