சனி, 21 நவம்பர், 2020

ஜமாஅத் தொழுகை முடிந்து யார் முதலில் எழுந்து செல்வது, ஆண்களா அல்லது பெண்களா?

வினாடி வினா

ஜமாஅத் தொழுகை முடிந்த பின்பு பெண்கள் முதலாவதாக வெளியேறிச் செல்ல ஆண்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் இருந்தது.


1. சரி

2. தவறு



விடை: 1. சரி


ஆதாரம்:

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள்.

பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக கருதுகிறேன் என்று இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.

(ஸஹீஹுல் புகாரி: 837. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


உம்முஸலமா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள்.

ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன்னால் பெண்கள் திரும்பிச் செல்வதற்காகவே இப்படி நபி(ஸல்) செய்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன் என ஸுஹ்ரி கூறுகிறார்.

(ஸஹீஹுல் புகாரி: 870. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக