ஞாயிறு, 15 நவம்பர், 2020

உண்மை மற்றும் பொய் சொல்வதன் இறுதி நிலை

வினாடி வினா

உண்மை மற்றும் பொய் சொல்வதன் இறுதி நிலை என்ன? 



விடை: உண்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும்; பொய் நரகத்திற்கு வழிவகுக்கும்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆம்விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். 

என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 6094. , அத்தியாயம்: 78. நற்பண்புகள்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக