ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

தர்மத்தில் சிறந்தது எது?

வினாடி வினா

தர்மத்தில் சிறந்தது எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?


விடை: ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும்


ஆதாரம்:

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்' என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 2748. , அத்தியாயம்: 55. மரண சாசனங்கள்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக