ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

நபி (ஸல்) அவர்களின் சமூகத்திலிருந்து விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேர்

வினாடி வினா

நபி (ஸல்) அவர்களின் சமூகத்திலிருந்து விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேர் எவ்விதமான தன்மை உடையவர்களாக இருப்பர்?


விடை: அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்


ஆதாரம்:

…...எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, '(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, 'அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, 'அவர்களில் நானும் ஒருவனா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்' என்று கூறினார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 5705. , அத்தியாயம்: 76. மருத்துவம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக