ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

அல்லாஹ்வின் தூதர் ________ எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள்.

வினாடி வினா

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் _______ எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள்.

1. இலேசானதையே (சுலபமானதை)

2. கடினமானதையே


விடை: 1. இலேசானதையே

ஆதாரம்:

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே - அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் -எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழி வாங்குவார்கள்.) 

(ஸஹீஹுல் புகாரி: 3560. , அத்தியாயம்: 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக