ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் எவ்வாறு வெருண்டோடுகிறான்?

வினாடி வினா

தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் எவ்வாறு வெருண்டோடுகிறான்?


விடை: வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரம்) வெருண்டோடுகிறான்


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரம்) வெருண்டோடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். இகாமத் சொல்லும் சப்தத்தைக் கேட்கும்போது அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக (மீண்டும் வெகுதூரம்) வெருண்டோடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 633., அத்தியாயம்: 4. தொழுகை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக