வியாழன், 31 டிசம்பர், 2020

தொட்டில் குழந்தையாக இருக்கும் பொழுது பேசிய நபி

வினாடி வினா

தொட்டில் குழந்தையாக இருக்கும் பொழுது பேசிய நபி யார்? 

1. ஆதம் நபி 

2. மூஸா நபி

3.  ஈஸா நபி


விடை: 3.  ஈஸா நபி

ஆதாரம்:

(மேலும், மர்யமை நோக்கி) வானவர்கள் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன் (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான்'' என்றும் ‘‘அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்'' என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' என்றும் கூறினார்கள். 

மேலும், ‘‘அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர, நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' (என்றும் கூறினார்கள்.) (3:45-46)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக