புதன், 30 டிசம்பர், 2020

மறுமை நாளில் முதன் முதலில் மண்ணறை பிளந்து எழுபவர்

வினாடி வினா

மறுமை நாளில் முதன் முதலில் மண்ணறை பிளந்து எழுபவர் யார்?


விடை: முஹம்மது நபி(ஸல்)

ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 4575., அத்தியாயம்: 43. நபிமார்களின் சிறப்புகள்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக