புதன், 2 டிசம்பர், 2020

பெற்றோர் அல்லாஹ்விற்கு இணைவைக்கும்படி நிர்பந்தித்தால், என்ன செய்ய வேண்டும்?

வினாடி வினா

பெற்றோருடன் நல்ல முறையில் உறவை பேண மார்க்கம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறிருக்க, அவர்கள் நம்மை அல்லாஹ்விற்கு இணைவைக்கும்படி நிர்பந்தித்தால், என்ன செய்ய வேண்டும்? 



விடை: அவர்களுக்கு கீழ்ப்படிய கூடாது. ஆயினும், இவ்வுலக விஷயத்தில் அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து நேசித்து வர வேண்டும்.


ஆதாரம்:

எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத ஒரு பொருளை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்'' (என்று கூறினோம்). (31:15)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக