வியாழன், 31 டிசம்பர், 2020

குர்ஆனை ஓதுகின்ற நல்லவரின் நிலை

வினாடி வினா

குர்ஆனை ஓதுகின்ற நல்லவரின் நிலையானது போன்றதாகும்?

1. பேரிச்சம்பழம்

2. எலுமிச்சை

3. துளசிச் செடி

4. குமட்டிக்காய்


விடை: 2. எலுமிச்சை

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்டு) குர்ஆன் ஓதாமலிருப்பவர், பேரிச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; (ஆனால்) அதற்கு வாசனை கிடையாது. தீயவனாக (நயவஞ்சகனாக)வும் இருந்துகொண்டு, குர்ஆனையும் ஓதிவருகிறவனின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு. தீமையும் செய்துகொண்டு, குர்ஆனையும் ஓதாமலிருப்பவனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு; அதற்கு வாசனையும் கிடையாது. 

என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார் 

(ஸஹீஹுல் புகாரி: 5020. , அத்தியாயம்: 66. குர்ஆனின் சிறப்புகள்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக