வியாழன், 31 டிசம்பர், 2020

யார் விஷயத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி நபி(ஸல்) கூறினார்கள்?

வினாடி வினா

யார் விஷயத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும் தன் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும்படி நபி(ஸல்) கூறினார்கள்?

1. பெண்கள்

2. அனாதைகள்

3. இரண்டுமே


விடை: 1. பெண்கள்


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

பெண்களின் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 3331. , அத்தியாயம்: 60. நபிமார்களின் செய்திகள்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக